தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் பொதுச்சின்னம் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமமுகவிற்கு,'பிரஷர் குக்கர்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் அருகே நகரச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், சிறுபான்மைப்பிரிவு மாவட்டச் செயலாளர் ஷாநவாஸ், தலைவர் இஷாக், இணைச் செயலாளர் சுரேஷ் எட்வர்ட், அம்மா பேரவை மாவட்டத் தலைவர் நஷீர் உசேன், நகர சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் செஜித் கான், மீனவரணி இணைச் செயலாளர் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்திகுமார், வார்டு செயலாளர்கள் பாபு கான், ஜீவாநந்தம், குமார், சரவணன், முஜிபுர் ரகுமான், முத்துவேல், அசார் உள்பட கட்சி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.