ETV Bharat / state

வருமுன் காப்போம் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கோவை மேயர்

author img

By

Published : Mar 7, 2022, 10:09 AM IST

கோவை அருகே " வரும் முன் காப்போம்" மருத்துவ முகாமை கோவை மாநகராடசி மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கலைஞரின் வருமுன்  காப்போம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த கோவை மேயர்
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த கோவை மேயர்

கோயம்புத்தூர்: காளப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" மருத்துவ முகாமை கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றித் தொடக்கி வைத்தார். கர்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை மேயர் வழங்கினார்.

இதனையடுத்து பேசிய மேயர் கல்பனா, தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஏற்கனவே 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதில், 1040 பேர் பயனடைந்துள்ளதாகவும், இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு நலம், எலும்பு முறிவு சிகிச்சை், பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட 10 சிறப்பு மருத்துவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கோவை மேயர்
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி பகுதிகளில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர் நல மையம் என ரூ15.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார். இம்முகாமில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, நகர் நல அலுவலர் ஜெகதீசன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: முதல் ஆட்டம் சென்னை vs கொல்கத்தா... முழு அட்டவணை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.