ETV Bharat / state

செவிலியர் பற்றாக்குறை: கோவை அரசு மருத்துவமனை செவிலியர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Apr 28, 2021, 2:23 PM IST

கோயம்புத்தூர்: செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை செவிலியர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்

கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் மருத்துவமனைகளில் ஊழியர்கள், செவிலியர், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் பல்வேறு இடங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நிலையில் அங்கு பணிபுரியும் செவிலியர் பலரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதனால், இதர நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமாக செவிலியர் இல்லாததால் தற்போது பணியாற்றி வரும் செவிலியருக்கு அதிக பணிச்சுமை ஏற்ப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்

எனவே செவிலியரை நியமனம் செய்து பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் மருத்துவமனை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த மருத்துவமனை முதல்வரிடம் அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: கண் மருத்துவமனை பயிற்சி செவிலி திடீர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.