ETV Bharat / state

சிறுமியை காதலிப்பதாக கூறி வன்புணர்வு செய்த இளைஞர் கைது

author img

By

Published : Jun 2, 2022, 6:12 AM IST

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று, தாலி கட்டி, பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறி வன்புணர்வு செய்த இளைஞர் கைது
சிறுமியை காதலிப்பதாக கூறி வன்புணர்வு செய்த இளைஞர் கைது

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் 47 வயதுள்ள ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 27ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனது 16 வயது மகள் காணவில்லை என்றும் தனது மகளை கண்டுபிடித்து தருமாறும் புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுயை தேடி வந்தனர்.

மற்றொரு பக்கம் பெற்றோர் சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமி ஒரு இளைஞருடன் மேல்மருவத்தூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இருப்பதாக சிறுமியின் தந்தைக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிறுமி மற்றும் இளைஞர் இருவரும் அங்கு இருந்தனர். இருவரையும் அழைத்துக்கொண்டு திருமங்கலம் காவல் நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமி வழக்கு என்பதால் இந்த வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்ததில், 13 வயதில் இருந்து இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அண்ணாநகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் வைத்து தனக்கு தாலி கட்டியதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் சிறுமி தனது வீட்டிற்குச் சென்று விட்டதாகவும், கழுத்தில் தாலி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை கடுமையாக எச்சரித்தது தெரியவந்தது. அதன் பின்னர் இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த மிளவுஅழகன் (19) என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி காதலித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், சிறுமியிடம் உடலுறவு வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இளைஞர் மீது சிறுமியை கடத்தி திருமணம் செய்தது, பாலியல் வன்புணர்வு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மனைவியுடன் சேர்ந்த நண்பர்.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த காதலி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.