ETV Bharat / state

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

author img

By

Published : Feb 12, 2021, 1:56 PM IST

சென்னை: ஆர்.கே. நகரில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை ஆர்.கே. நகர் தண்டையார்பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் குமார். சந்தைப் பகுதியில் சிறிய கடை நடத்திவருகிறார். இவரது மகன் கௌதம் (19). இவர், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்துவந்தார்.

இந்நிலையில், இன்று (பிப். 12) மதியம் உணவு இடைவேளைக்காகச் செல்வதற்கு தனது மகன் கௌதமை கடைக்கு அழைத்துள்ளார்.

பின்னர், கடைக்கு வந்த கௌதம் மின்விசிறி போடுவதற்காக ஸ்விட்சை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விருதுநகர்: மோட்டார் பழுதுப்பார்க்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.