ETV Bharat / state

தமிழ்நாடு அரசு குற்றவாளிக்கூண்டில் நிற்கிறது - வைகோ குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 16, 2019, 1:33 PM IST

சென்னை: நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழ்நாடு அரசு குற்றவாளிக் கூண்டில் இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

vaiko talks on Mekedatu dam issue

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதற்கு முன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கர்நாடக அரசு, தென்பெண்ணையில் அணைகட்டும் பணியினை 70விழுக்காடு முடித்துவிட்டது.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசின் இந்தச்செயலையடுத்து தீர்ப்பாயத்தை ஏன் அமைக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசை அணுகாததன் காரணம் என்ன? என்று கேட்டதற்கு இன்று வரை பதிலில்லை.

நீர் மேலாண்மை விசயத்தில் தமிழ்நாடு அரசு குற்றவாளிக் கூண்டில் இருக்கிறது

நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழ்நாடு அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பதில் சொல்லமுடியாத முதலமைச்சர், உள்ளாட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்தவிடமால் தடுக்கிறார் என்று கூறுகிறார்.

உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த அதிமுக வேண்டுமானால் முயற்சி செய்யும். ஆனால், திமுக அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. உள்ளாட்சித்தேர்தலில் திமுக - மதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’பி.எஸ். கிருஷ்ணனின் மறைவு பட்டியிலின மக்களுக்கு பேரிழப்பு’ - திருமாவளவன்

Intro:டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
Body:டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீர்மேலான்மை விசயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது என்றார். கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு தீர்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதாக குற்றம் சாட்டினார்.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக வேண்டுமானால் முயற்சி செய்யும், ஆனால் திமுக அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் எனக் கூறினார்.

தமிழகத்தில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லை தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.