ETV Bharat / state

கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற உணவு விடுதி உரிமையாளர்

author img

By

Published : Jun 26, 2019, 5:03 PM IST

சென்னை: கந்துவட்டி கொடுமையால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, உணவு விடுதி உரிமையாளர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fire bath

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் இவர், உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த பொதுமக்களும், காவல்துறையினரும் அவரை தடுத்து உடம்பில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். இதனை தொடர்ந்து தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு கந்துவட்டி தொழில் நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் உணவகத்தின் மேம்பாட்டிற்காக 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 4.5 லட்சம் ரூபாய் வரை திருப்பி செலுத்தி உள்ளேன். கடனை முழுவதும் செலுத்திய பிறகும் கண்ணன் தனது உணவகத்தை அபகரித்து 1.5 கோடி மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்று விட்டார்.

இது குறித்து நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நுங்கம்பாக்கம் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டு என்னை மிரட்டி வருகிறார்.

எனவே கடையை அபகரித்த கண்ணன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு நீதியும் கிடைக்காததாலேயே தற்கொலைக்கு முயன்றேன் என்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:nullBody:கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தீக்குளிக்க முயற்சி*

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார். இவர் இன்று காலை சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்த பொதுமக்களும் காவல்துறையினரும் அவரை தடுத்து உடம்பில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கராஜ், கடந்த 2017 ஆம் ஆண்டு கந்துவட்டி தொழில் நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் தனது உணவகத்தின் மேம்பாட்டிற்காக 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 4.5 லட்சம் ரூபாய் வரை திருப்பி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடனை முழுவதும் செலுத்திய பிறகும் கந்துவட்டி கண்ணன் தனது உணவகத்தை அபகரித்து 1.5 கோடி மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், நுங்கம்பாக்கம் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியும் கந்துவட்டி கண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டு தனது கடையின் அபகரிப்பிற்கு காரணமாக இருந்துள்ளார் எனவும் அவரிடம் இது குறித்து கேள்வி கேட்டபோது தன்னை மிரட்டி இந்த வழக்கை சிபில் வழக்காக மாற்றி தன்னை துரத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு நீதியும் கிடைக்காததாலேயே தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது கடையை அபகரித்த கண்ணன் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தனது கடையை மீட்டுத்தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

(பேட்டி - தங்கராஜ் - பாதிக்கப்பட்டவர்)Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.