ETV Bharat / state

சென்னையில் 27 ஆயிரத்து 398 பேருக்கு கரோனா!

author img

By

Published : Jun 11, 2020, 7:57 PM IST

சென்னை : மாநகராட்சி முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 398 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 279 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona
corona

தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 77 ஆய்வகங்களில் இதுவரை ஆறு லட்சத்து 16 ஆயிரத்து 395 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 38 ஆயிரத்து 716 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 456 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இன்று மட்டும் ஆயிரத்து 875 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 659 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஆயிரத்து 372 பேர் குணமடைந்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 20 ஆயிரத்து 705 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 23 பேர் இன்று கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு

வரிசை எண்மாவட்டம்பாதிப்பு
1 சென்னை27,398
2 செங்கல்பட்டு2,444
3 திருவள்ளூர்1,656
4காஞ்சிபுரம்624
5திருவண்ணாமலை565
6கடலூர்517
7திருநெல்வேலி410
8விழுப்புரம்399
9தூத்துக்குடி379
10அரியலூர்387
11மதுரை 363
12கள்ளக்குறிச்சி303
13சேலம் 222
14திண்டுக்கல் 196
15கோயம்புத்தூர் 170
16ராணிப்பேட்டை 185
17விருதுநகர் 154
18பெரம்பலூர் 145
19தேனி 137
20திருச்சி 142
21தஞ்சாவூர் 133
22ராமநாதபுரம் 133
23வேலூர் 131
24திருப்பூர் 114
25தென்காசி 111
26கன்னியாகுமரி 108
27நாகப்பட்டினம் 105
28நாமக்கல் 90
29கரூர்87
30திருவாரூர் 99
31ஈரோடு 74
32புதுக்கோட்டை 45
33சிவகங்கை 50
34திருப்பத்தூர் 43
35கிருஷ்ணகிரி38
36 தருமபுரி23
37நீலகிரி 14
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.