சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 100 % பொது நகைக்கடன்களை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
நகைக்கடன்களில் முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 100% பொது நகைக்கடன்களை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அனுப்ப தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்கள் மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மொத்த நகைகளின் விவரம், ஆய்வு செய்ய தேவையான குழுக்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு 250 முதல் 300 பாக்கெட்டுகள் என்ற வீதம் மொத்த நகைகளை ஆய்வு செய்ய தேவைப்படும் நாட்கள் மற்றும் தோராயமாக 100 % நகைக்கடன் ஆய்வு முடிவுறும் நாள் போன்ற விவரங்களை Google Sheet-இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பொது நகைக்கடன்களை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்ட அடுத்த நாள் மாணவர் மரணம் - காவல்துறை விசாரணை