மக்கள் நல்வாழ்வு துறை இன்று(பிப்.18) வெளியிட்டுள்ள தகவலின் படி, தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 50 ஆயிரத்து 944 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 454 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், பிகாரில் இருந்து வந்த ஒருவருக்கும் என 457 நபர்களுக்கு இன்று (பிப்.18) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 937ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4,173 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 470 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 320ஆக அதிகரித்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் என மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 444 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - : 2,33,936
கோயம்புத்தூர் - : 55,319
செங்கல்பட்டு - : 52,310
திருவள்ளூர் - : 43,961
சேலம் - : 32,620
காஞ்சிபுரம் - : 29,405
கடலூர் - : 25,095
மதுரை - : 21,175
வேலூர் - : 20,910
திருவண்ணாமலை - : 19,450
தேனி - : 17,138
தஞ்சாவூர் - : 17,942
திருப்பூர் - : 18,198
விருதுநகர் - : 16633
கன்னியாகுமரி - : 17,004
தூத்துக்குடி - : 16,331
ராணிப்பேட்டை -: 16,200
திருநெல்வேலி - : 15,684
விழுப்புரம் - : 15,242
திருச்சிராப்பள்ளி - : 14,901
ஈரோடு - : 14,675
புதுக்கோட்டை - : 11,627
கள்ளக்குறிச்சி - : 10,903
திருவாரூர் - : 11,299
நாமக்கல் - : 11,761
திண்டுக்கல் - : 11,393
தென்காசி - : 8,501
நாகப்பட்டினம் - : 8,559
நீலகிரி - : 8,297
கிருஷ்ணகிரி -: 8;127
திருப்பத்தூர் - : 7,621
சிவகங்கை -: 6,739
ராமநாதபுரம் - : 6,447
தருமபுரி - : 6,639
கரூர் - : 5,480
அரியலூர் - : 4,717
பெரம்பலூர் - : 2,281