ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாரான திமுக: அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள்!

author img

By

Published : Dec 14, 2019, 5:20 PM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

congress parties
congress parties

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்துவதில் மும்முரம் காட்டிவந்த திமுக, முதல்கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தலைமைக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி. ஜெயக்குமார், காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இவர்களைத் தொடர்ந்து இன்று மாலை மதிமுக சார்பில் வைகோ, விசிக சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டி - வைகோ

Intro:Body:உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் திமுக, அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள்.

காங்கிரஸ் திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார், காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்கட்டமாக திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உரிய அதிகாரம் போன்றவையை திமுக அந்த அந்த மாவட்ட தலைமைக்கு வழங்கியுள்ளது. தற்போது வரை,
தற்போது வரை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்திய, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு,
தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு
ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து திமுக பேச்சுவார்த்தை நடித்த இறுதிவேட்பாளர் படியில் அந்த அந்த மாவட்டக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாயாலத்தில் காங்கிரஸ் சார்பாக எம்.பி ஜெயக்குமார், காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடித்தனர்.

முன்னதாக நேற்றைய முன் தினம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சென்ற வாரத்தில் இந்தியா மார்க்சிஸ்ட் கட்சி மணிலா பொதுச்செயலர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை செந்தித்து ஆலோசனை நடித்தியுள்ளார். மேலும் இன்று மாலை மதிமுக சார்பில் வைகோ, நாளைய தினம் விசிக சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.