ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படை அதிரடி: 5 நாள்களில் ரூ.1.6 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்

author img

By

Published : Feb 1, 2022, 11:05 PM IST

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த ஐந்து நாள்களில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 710 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பறக்கும் படை அதிரடி
தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க, பணம் பட்டுவாடாவைத் தடுக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பறக்கும் படைகள் சென்னையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப்பணம் எடுத்துச் செல்லக் கூடாது, அதேபோல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் கடந்த ஐந்து நாள்களில் 4 லட்சத்து 710 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்சென்ற 15 மடிக்கணினிகள், 40 கைபேசிகள், வெளிநாடு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த ஐந்து நாள்களில் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 710 ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.