ETV Bharat / state

பாஜக ஆட்சியில் நாடு கண்ட வளர்ச்சி என்ன? - 'உங்களில் ஒருவன்' வீடியோவில் விளாசிய ஸ்டாலின்!

author img

By

Published : Mar 9, 2023, 9:20 AM IST

Updated : Mar 9, 2023, 3:35 PM IST

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவின் கடன் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது தான் நாடு அடைந்த வளர்ச்சி என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ கேள்வி பதில் வீடியோவில் கடுமையாக சாடியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

'உங்களில் ஒருவன்' வீடியோவில் பாஜகவை விமர்சனம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!

இதுதொடர்பாக மார்ச் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள 'உங்களில் ஒருவன்' கேள்வி பதில் வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது,

1. கேள்வி: உங்களின் எழுபதாவது பிறந்தநாளில் தொண்டர்கள் அளித்த மனம் கவர்ந்த பரிசு எது?

பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிடப் பெரிய பரிசு இருக்க முடியுமா?

2.கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரிகளில் சொல்ல வேண்டுமானால்?

பதில்: தோள் கொடுப்பான் தோழன் என்பதின் அடையாளம் அவர்கள்.

3.கேள்வி: கிராமப்புற மாணவ மாணவியரிடம் ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?

பதில்: நல்லா ஏற்பட்டிருக்கு கடந்தாண்டு மார்ச் 1-ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 1300 கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் உள்ள 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டமே அனைத்து மாணவர்களுக்கும் ஆனது.

நகர்புற மாணவர்களுக்காவது பயிற்சி மையங்களுக்குப் போகும் வாய்ப்பு உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்குத் தான் ‘நான் முதல்வன்’ திட்டமானது அதிகமாகத் தேவைப்படுகிறது. தமிழ்நாடு இளைஞர்கள் அனைவரும் ‘நான் முதல்வன்’ எனக் கூறும் வரை இந்தத் திட்டத்தை எனது கண்காணிப்பில் தொடர்ந்து வைத்திருப்பேன்.

4.கேள்வி: ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்குச் செவி மடுப்பார்களா?

பதில்: இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு அவர்களுக்குக் காது இல்லை என தோன்றுகிறது

5.கேள்வி: டெல்லி துணை முதலமைச்சர் மணி சிசோரியா கைது பற்றி உங்களின் கருத்து?

பதில்: எதிர்க்கட்சிகளை மறைமுகமாக வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டு இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர் .டெல்லி துணை முதலமைச்சர் கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்க்கட்சிகளைத் தேர்தல் மூலமாக ஜெய்க்கலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக் கூடாது.

6.கேள்வி: வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: தேர்தல் முடிவுகளின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பாஜக. திரிபுராவில் பாஜக எதிர்ப்பார்ப்புகளை திப்ர முக்தா கட்சி பிரித்தன் காரணமாக காங்கிரஸ் இடதுசாரிகள் அணி தோல்வியில் தழுவி பாஜகவில் வெற்றி பெற வைத்து விட்டார்கள். நாகாலாந்தில் தேசிய வாத ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக வெற்றி பெற்று இருக்கிறார்கள். கூட்டணி அமைக்காமல் போயிருந்தால் இந்த வெற்றி கிடைத்து இருக்காது.

திரிபுரா நாகலாந்து வெற்றி பேசுபவர்கள் ஏன் மேகலாவை பற்றி பேசுவதில்லை. அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகள் 59க்கு 59 தொகுதியிலும் போட்டியிட்ட பாஜக இரண்டே இரண்டு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியதன் மூலம் ஆளுங்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது. இதுபோன்ற பிம்பங்களை கட்டமைத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருவது போல் காட்டிக் கொள்கின்றனர். போலரிஷேசன், சோசியல் இன்ஜினியரிங், மீடியா மேனேஜ்மென்ட் இந்த சொற்களுக்கான பொருட்களை புரிந்து கொண்டால் பாஜகவதற்கான தேர்தல் வெற்றிகளை புரிந்து கொள்ளலாம்.

7.கேள்வி: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது குறித்து உங்களின் கருத்து?

பதில்: நேரில் போய் பாருங்கள் இன்னும் பிரமிப்பாக இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்து கீழடிக்காத தொடர்ந்து சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். எங்களின் தொடர் வற்புறுத்தலால் தான் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. அங்கு அருங்காட்சியம் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அடிக்கல் மற்றும் நாட்டை விட்டு எந்த பணியும் செய்யாமல் இருந்தார்கள்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தான் அந்தப் பணியை விரைவுபடுத்தி தற்போது முடித்துள்ளோம். அந்த அருங்காட்சியத்தை திறந்து வைத்து பார்க்கத் தொடங்கியதும் என்னால் நகரவே முடியவில்லை. ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருந்தது. 2600 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த மக்கள் என்னவெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது கண்டுபிடித்து சேகரித்து நமது அரசு காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இடத்தில் நின்று ஆர்வத்தால் செல்பி எடுத்துக் கொண்டேன்.

எத்தகைய நாகரிகம் பண்பாடும் கொண்டவர்களாக தமிழர்கள் இருந்தார்கள் என்பதை அறியும் பொழுது பெருமையாக இருந்தது. அருங்காட்சியகம் காணொளி தொடுதிரை 3டி என தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பெயரை தொடுதிரையில் எழுதினால் தமிழ் எழுத்தில் தங்கள் பெயரை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அனைவரும் நேரில் போய் பாருங்கள் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒரு முறையாவது கீழடி வந்து பாருங்கள்.

8.கேள்வி: மகளிர் தினம் நேற்று நடைபெற்ற நிலையில் மகளிர்க்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பதில்: நிமிர்த்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிச்சல் கொண்டவர்கள் மகளிர். அனைவரும் உயர வேண்டும் என்பதை எனது எண்ணம். அனைத்து மகளிரும் படிக்க வேண்டும், உயர் கல்வி பெற வேண்டும், உரிய வேலைக்கு செல்ல வேண்டும். திருமணம், குழந்தைகள், குடும்பம் ஆகியவற்றோடு நிறைவடைந்து விடாமல் சமூக பங்களிப்பை தங்கள் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பெண்களுக்கு நான் சொல்வதை விட ஆண்களுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல நினைக்கிறேன் பெண்களை குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும், இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.

9.கேள்வி: வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?

பதில்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், சிலர் வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஊரிலும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சிலர் பேக் வீடியோக்களை தயாரித்து தியா பரப்பி இருப்பாங்க வட மாநிலங்களைச் சார்ந்த பாஜக நிர்வாகிகள் இதை செய்துள்ளது. உள்நோக்கம் கொண்டதுதான் பாஜகவிற்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணை வேண்டிய அவசியத்தை நான் எடுத்துச் சொன்ன மறுநாளே இப்படிப்பட்ட பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கப்பட்டதை கவனித்தால் இதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.

இந்த செய்தி கிடைத்தவுடன் தொழிலாளருக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லை கூட ஏற்படவில்லை என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கும் தெரிவித்துள்ளேன். தமிழ்நாடு காவல் துறை தலைவர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அதிகாரிகளும் நேரில் வந்து பார்த்து முழு திருப்தியுடன் சென்றுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தான் எல்லோரும் சொல்வார்கள் தமிழ்நாடு தமிழர்களும் ஒற்றுமையும் சகோதரத்துவத்தையும் விரும்பும். அவர்கள் பிறப்போக்கும் எல்லா ஊருக்கும் யாரும் ஊரே யாவரும் கேளிர் என்று உயர்ந்த சிந்தனை கொண்டு உள்ளவர்கள் இதை இங்குள்ள வட மாநிலத்தவர்கள் நல்லாவே தெரியும்

10.கேள்வி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதே?

பதில்: இந்தியாவை வளர்த்துள்ளோம் என பாஜக சொல்வது எது தெரியுமா பாஜக ஆட்சிக்கு வரும்போது 2014ஆம் ஆண்டு ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய் இப்பொழுது சிலிண்டர் விலை 1118 ரூபாய் 50 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா இப்பொழுது விலை 102 ரூபாய் 63 பைசா. ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா இப்பொழுது ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்பொழுது கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது இதுதான் பாஜகவில் அடைந்த வளர்ச்சி.

இதையும் படிங்க: மத்திய அரசுப் பணிகள் மீது தமிழக இளைஞர்களுக்கு மோகம் குறைவு? - TNSDC புதிய திட்டம்

Last Updated :Mar 9, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.