ETV Bharat / state

ஞாயிறு முழுநேர ஊடரங்கு ரத்து செய்ய வாய்ப்பா? மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

author img

By

Published : Jan 26, 2022, 10:56 PM IST

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழுநேர ஊரடங்கு ரத்து செய்வது அல்லது நீட்டிப்பு குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய தினம் 29,976 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்து வருவதால் ஞாயிறு முழுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

வருகின்ற 31ஆம் தேதியுடன் இரவுநேர ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.27) சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழுநேர ஊரடங்கு ரத்து செய்வது அல்லது நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.

கரோனா தொற்று குறைய உள்ள நிலையில் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறைந்து வரும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.