ETV Bharat / state

நீட் பயிற்சி மையத்தில் வருமானவரித்துறை சோதனை: ஸ்டாலின் ட்வீட்!

author img

By

Published : Oct 12, 2019, 8:16 PM IST

சென்னை: நீட் பயிற்சி மையங்களில் தொடர்ந்து வருமானவரித்துறையினரால் கைப்பற்றுப்பட்டு வரும் பணம் குறித்தும், நீட் தேர்வால் எவ்விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்டாலின்

இந்தியாவில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற விதி மூன்று ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் பயிற்சி மையங்கள் முக்கிய தொழிலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதில் கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடிக்கும் மேலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • The corrupt and tax evaders are making illegal profits from NEET while medical aspirants and their parents continue to suffer under this broken system.

    The I.T. search shows that only the rich can afford NEET preparation and proves our claim that NEET discriminates against poor. https://t.co/eA8t4LvnnA

    — M.K.Stalin (@mkstalin) October 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நீட் தேர்வு அமலுக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் நீட் பயிற்சி மையங்களின் வருவாய் பெருவாரியாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ஊழல் மற்றும் வரிஏய்ப்பு செய்பவர்கள் நீட் தேர்வின் மூலம் பல்வேறு வகைகளில் பலனடைந்து வருகின்றனர். இதனால் மருத்துவம் படிப்பில் சேரவேண்டுமென்ற கனவோடு படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது இந்த வருமான வரித்துறையினரின் சோதனை நீட் தேர்வினை பணக்காரர்கள் மட்டுமே எழுத முடியும் என்பதைக் காட்டுகிறது. மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரான ஒன்றானது என்பது நிரூபணமாகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!

Intro:தென்காசியில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடங்கும் விழா நடைபெற்றது


Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் கோவில்பட்டி கூட்டம் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடங்கும் விழா நடைபெற்றது அஞ்சல் துறையின் தமிழ்நாடு தென் மண்டல இயக்குனர் சோமசுந்தரம் கலந்துகொண்டு இறப்பு காப்பீடு முதிர்வு காப்பீட்டு தொகை மற்றும் விதவை காப்பீட்டு தொகை போன்ற காப்பீட்டு தொகையை பயனாளிகளுக்கு வழங்கினார் தென்காசி செங்கோட்டை ஆலங்குளம் சங்கரன்கோவில் கடையநல்லூர் போன்ற பகுதியில் இருந்து அஞ்சல் துறை ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.