ETV Bharat / state

மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்!

author img

By

Published : Nov 19, 2020, 10:50 PM IST

சென்னை: வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை(அக்.20) முதல் மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Southern Railway announces new special train
Southern Railway announces new special train

இந்தியாவில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மார்ச் இறுதி வாரத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து முதலில் மே மாதம் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதன்பின், சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், நாளை(அக்.20) முதல் மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு மற்றுமொரு சிறப்பு ரயிலை இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தினமும் மாலை 4.30 மணிக்கு மைசூருவில் புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். இந்த ரயில் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திருவரும்பூர், பூதலூர், தஞ்சாவூர், கும்பகோணம், ஆடுதுரை, குற்றாலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தினமும் மாலை 5.50 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 8.20 மணிக்கு மைசூரு வந்தடையும். வரும் வழியில் குற்றாலம், ஆடுதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், பூதலூர், திருவரும்பூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு தனி வகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.