ETV Bharat / state

மாண்டஸ் புயல்: நாளை(டிச.10) பள்ளிகளுக்கு விடுமுறை?

author img

By

Published : Dec 9, 2022, 3:22 PM IST

மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்வதால், நாளை சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வித்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மாண்டஸ் புயல்(mandous cyclone) காரணமாக இன்று(டிச.09) சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், தருமபுரி, வேலூர் உட்பட 25-க்கும் அதிகமான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. புயல் இன்று இரவு தான் கரையை கடக்கும் என்பதால், நாளை காலையும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிடுவார்கள். கடந்த வாரம் சனிக்கிழமை மழையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுப்பிற்கு பதில் பள்ளிகள் செயல்பட்டன. இந்த நிலையில் மீண்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.