ETV Bharat / state

ரேசன் பொருள்களை கடத்தினால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Aug 25, 2021, 5:22 PM IST

பொது விநியோக திட்டம் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருள்களை கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இதுதொடர்பாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த 3 மாதங்களில் பொது விநியோக திட்டத்தில் கொடுக்கப்படும் பொருள்களை கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபட்ட புகாரில் 2 ஆயிரத்து 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசி கடத்தல் தொடர்பாக ஆயிரத்து 918 வழக்குகளும், மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 66 வழக்குகளும், இதர இனங்களில் 51 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம்,ஆயிரத்து 255 மெட்ரிக் டன் அரிசியும், 7 ஆயிரத்து 673 லிட்டர் மண்ணெண்ணெய் கைபற்றப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இரண்டு கோடியே 2 லட்சம் 19 ரூபாய். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 27 பேர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.