ETV Bharat / state

பயங்கர ஆயுதங்களுடன் அட்டகாசம் செய்த ரவுடிகளுக்கு வலை...

author img

By

Published : Oct 30, 2019, 4:43 PM IST

சென்னை: திருமங்கலத்தில் தீபாவளியன்று ரவுடிகள் குடிபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு அட்டகாசம் செய்தனர்.

diwali day rowdies videos in chennai, சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம்

சென்னை திருமங்கலம் பெரியார் தெருவில் ரவுடிகள் தீபாவளியன்று பொது இடத்தில் மது குடித்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மது அருந்தி அட்டகாசம் செய்த ரவுடி கும்பலை எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு வந்த ரவுடிகள் புகார் அளித்தது யார் என கேட்டு தெருவில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை சேதப்படுத்தியும், வீட்டின் ஜன்னலை உடைக்கும் செயலிலும் ஈடுப்பட்டனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை ஆய்வு செய்த திருமங்கலம் காவல் துறையினர் குடிப்போதையில் அராஜகம் செய்த ரவுடி கும்பலைச் சேர்ந்த தீபக் என்ற நபரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள 6 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

diwali day rowdies videos in chennai, சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம்
இதையும் படிங்க: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Intro:Body:திருமங்கலத்தில் தீபாவளியன்று குடிப்போதையில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு ரவுடிகள் அட்டகாசம்..

திருமங்கலம் பெரியார் தெருவில் இளைஞர்கள் சிலர் தீபாவளி தினத்தன்று பொது இடத்தில் மது குடித்தும்,பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தனர்.. அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் சிலர் திருமங்கலம் காவல் நிலையத்தில் குடிப்போதையில் ஒரு கும்பல் அட்டகாசம் செய்வதாக புகார் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு மது அருந்தி அட்டகாசம் செய்த கும்பலை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.பின்னர் அதிகாலை வந்த அதே கும்பல் குடிப்போதையில் பயங்கர ஆயுதங்களை வைத்துகொண்டு புகார் அளித்தது யார் என அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தியும்,வீட்டின் ஜன்னலை உடைக்கும் செயலில் ஈடுப்பட்டனர். இது தொடர்பான செல்போன் வீடியோ தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் இந்த வீடியோவை வைத்து திருமங்கலம் போலிசார் குடிப்போதையில் அராஜகம் செய்த கும்பலில் தீபக் என்ற நபரை போலிசார் கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.