ETV Bharat / state

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.. முதலமைச்சர் கேள்வி - அதிமுக வெளிநடப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 12:47 PM IST

TN Assembly: நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து இன்றைய சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

release-of-islamic-prisoners-resolution-to-attract-attention-in-tn-legislature
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை... சட்டபோரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று (அக்.10) நடைபெற்று வருகிறது. இதில் நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து இன்றைய சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆயுள் சிறைவாசிகளாக சிறையில் அடைபட்டுள்ளோரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிறப்பு கவன ஈர்ப்பில் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த கருத்துகளுக்கு எந்த மாறுபாடுகளை, வேறுபாடுகளை நாங்கள் எடுத்துச் சொல்லவில்லை. முழு மனதோடு அவற்றை ஏற்க தயாராக உள்ளோம். தமிழ்நாடு சிறைவாசிகளில் 10, 20 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், நோயுடனும், மன நலனும் குன்றி இருப்போர் நிலையை மனிதாபிமான அடிப்படையில் ஆராய ஓய்வு பெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

28.10.2022-இல் குழு பரிந்துரை அறிக்கையை அளித்தது. இவற்றில் 262 பேரை விடுதலை செய்ய பரிந்துரைத்தது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் அனைவரையும் விடுதலை செய்வோம். உண்மையிலேயே இஸ்லாமியர்கள் மீது அதிமுகவிற்கு அக்கறை இருந்தால், ஆளுநருக்கு அனுப்பி வைத்த கோப்புகள் கையெழுத்திடாமல் இப்போது வரை உள்ளது. அந்த கோப்புகளில் கையெழுத்திட அதிமுகவினர் ஆளுநரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுப்பார்களா?” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச நேரம் ஒதுக்காததாகக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அவையில் இருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: மீண்டும் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்.. நாளை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.