ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Dec 21, 2021, 7:17 PM IST

தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரை விடுவிக்கக்கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வழங்கினர்.

முதலமைச்சர் கடிதம்
முதலமைச்சர் கடிதம்

அந்தக் கடிதத்தில், "இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 68 பேரையும், அவர்கள் பயன்படுத்திய 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசிடம் பேசி தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.