சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு (4 நாட்களுக்கு) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு: குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 13 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. நாகர்கோவில் (கன்னியாகுமரி) 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி) 8 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. அடையாமடை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
பாலமோர் (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. குழித்துறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், நாளை (அக்.04) தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதேபோல், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் யாரும் இந்தப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல் - காரணம் என்ன?