ETV Bharat / state

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!

author img

By

Published : Oct 10, 2021, 3:44 PM IST

கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ரூ.65 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தக்காளி
தக்காளி

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதையொட்டி மக்களும் அதிகளவில் காய்கறிகளை வாங்க குவியத் தொடங்கியுள்ளனர்.
விளைச்சல் இல்லாத சமயத்தில் தேவை அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை உயர்வின் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: உலகின் முதல் மலேரியா தடுப்பூசி.. பாரத் பயோடெக் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.