ETV Bharat / state

கோத்தபய வருகைக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

author img

By

Published : Nov 29, 2019, 11:52 PM IST

சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினரும், வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest against kothapaya rajapakse
kothapaya

இந்திய அரசின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு நேற்று வந்துள்ளார். இதைப் பலரும் எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திராவிடர் தமிழர் கட்சியும் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் தமிழர் கட்சியினர் அவர்களது கொடியையும் கருப்பு கொடியையும் ஏந்தியவாறு வந்தனர். அவர்களில் சிலர் கையிலும் தலையிலும் கட்டு போட்டபடி வந்தனர். மேலும், 'கோ பேக் கோத்தபய என்ற பிளக்ஸ்' பேனரை வைத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Protest at Chennai
Protest against kothapaya rajapakse
Protest against kothapaya rajapakse

மேலும், இதேபோல் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈழத்தமிழர்களைக் கொன்ற இலங்கை அதிபரை, இந்திய அரசே வரவேற்காதே என்று கோஷங்களை எழுப்பினர்.

Intro:இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினரும் வழக்கறிஞர்களும் போராட்டம்


Body:இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினரும் வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மத்திய அரசிம் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச இந்தியாவிற்கு நேற்று வந்துள்ளார் அவருக்கு மத்திய அரசு ராஜமரியாதை அளித்தது. இதை பலரும் எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திராவிடர் தமிழர் கட்சியும் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் தமிழர் கட்சியினர் அவர்களது கொடியையும் கருப்பு கொடியையும் ஏந்தியவாறு வந்தனர். அவர்களில் சிலர் கையிலும் தலையிலும் கட்டு போட்டபடி வந்தனர். மேலும் கோ பேக் கோத்தபாய என்ற பிளாக்ஸ் பேனரை வைத்து கொண்டு வந்தனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையில் போக்குவரத்து பதிக்கப்பட்டது. இதனால் அவர்களை காவல் துறையினர் கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். அதனால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும் இதை கண்டித்தே கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈழத்தமிழர்களை கொன்ற இலங்கை அதிபரை இந்திய அரசே வரவேற்காதே என்றும் வார் கிரிமினல் கோத்தபாய ராஜபக்ச கோ பேக் என்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய சமூக நீதி அமைப்பு செயலாளரும் வழக்கறிஞருமான சக்திவேல் இலங்கையில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த தமிழர்களை கொன்றவன் கோத்தபாய ராஜபக்ச என்றும் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை போட்டு ஈழத்தமிழர்களை கொன்றவன் என்றும் கூறினார். அவரை மத்திய அரசு ராஜ மரியாதையுடன் வரவேற்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.