ETV Bharat / state

சுங்கத்துறை அலுவலர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு!

author img

By

Published : Oct 22, 2021, 7:03 AM IST

Property accumulation case against customs officer  Property accumulation  customs officer  cbi  cbi raid  chennai customs officer  case against customs officer  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சுங்கத்துறை அலுவலர்  சொத்து குவிப்பு  சொத்து குவிப்பு வழக்கு  சுங்கத்துறை அலுவலர் மீது சொத்து குவிப்பு வழக்கு  சுங்கத்துறை  மத்திய புலனாய்வுத் துறை  புலனாய்வு
சொத்து குவிப்பு

சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர் மற்றும் அவரது மனைவி மீது மத்திய புலனாய்வுத் துறையினர் சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: சுங்கத்துறை அலுவலகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் முகமது இர்பான் அகமது. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுங்கத் துறையில் விமான உளவுத்துறை பிரிவின் சூப்பரண்ட் ஆக பதவி உயர்வு பெற்றார்.

இந்நிலையில் இவரும் இவரது மனைவி தஷிம் மும்தாஜூம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக லக்னோ விற்கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டிருதனர். அதனடிப்படையில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் சென்ற அவர்கள், லக்னோ செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளனர்.

அப்போது பெங்களூருவில் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம், 169 கிராம் தங்கம், ஐந்து விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள முகமது இர்பான் அகமது வீட்டில் பெங்களூரு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 64 ஆயிரம் பணம், 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்ததில், சுங்கத் துறையில் சூப்பிரண்டாக பதவி உயர்வு அடைந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜனவரி வரை சம்பாதித்த பணத்தின் வரவு செலவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது 1851 விழுக்காடு அதிகமாக சொத்துக்களை குவித்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக சொத்துக்களை குவித்ததாக மத்திய புலனாய்வுத் துறையினர் கூறும் காலகட்டத்திற்கு முன்பாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வைத்து இருந்தார். ஆனால் இந்தாண்டு ஜனவரி மாதம் சோதனை செய்த போது வரவு செலவு ஆகிய வற்றைத் தவிர்த்து சுமார் 75 லட்சம் ரூபாய் சொத்துக்கள் வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி சிபிஐ அலுவலர்கள் முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: விவாகரத்து கிடைக்காத விரக்தி - மனைவிக்கு மாப்பிள்ளை பார்த்த கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.