ETV Bharat / state

தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை..!

author img

By

Published : Aug 16, 2021, 7:11 PM IST

தனியார் பள்ளிகளில் சேர, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின் கீழ், 82 ஆயிரத்து 766 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

private school admissions going on by rte act  private school admission  school admissions  rte act  admissions  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  ஆர்டிஇ சட்டம்  ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை  மாணவர் சேர்க்கை  தனியார் பள்ளி  தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை

சென்னை: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் சேர்வதற்கான கால அவகாசம் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 07 ஆயிரத்து 984 இடங்களுக்கு, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின்கீழ் 82 ஆயிரத்து 766 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

குலுக்கல் முறையில் தேர்வு

இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும்; மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் உள்ள இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் வரும் 19ஆம் தேதி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.

மொத்த இடங்களைவிட குறைவாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளிலும்; அதே நாளன்று மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கு முன்னதாக தகுதி வாய்ந்த மாணவர்கள், தகுதி இல்லாத மாணவர்களின் விவரங்கள் 18ஆம் தேதியே வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 13 ஆயிரத்து 368 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 602 விண்ணப்பங்கள் குறைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.