ETV Bharat / state

பொங்கல்: ஊருக்கு கிளம்பணுமா..? நாளை முன்பதிவு எத்தனை மணிக்கு தொடங்குது தெரியுமா?

author img

By

Published : Dec 28, 2022, 8:26 PM IST

Updated : Dec 28, 2022, 9:03 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நான்கு சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை காலை தொடங்கப்படவுள்ளது.

Pongal
Pongal

மதுரை: பொங்கல் பண்டிகை அடுத்தாண்டு வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தாம்பரம் - திருநெல்வேலி இடையே இரண்டு சிறப்பு ரயில்களும், தாம்பரம் - நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் இடையே தலா ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

Last Updated :Dec 28, 2022, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.