ETV Bharat / state

பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் இரங்கல் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 8:16 AM IST

Bangaru Adikalar death: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காலமான நிலையில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Political leader condolences for late Bangaru Adikalar
ஸ்ரீ பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

சென்னை: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடத்தின் ஆன்மிக குரு மற்றும் பக்தர்களால் ‘அம்மா’ என அழைக்கப்படும் பங்காரு அடிகளார், உடல்நலக்குறைவால் நேற்று (அக்.19) மாலை காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

  • ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில்… pic.twitter.com/odE6bFSOv6

    — Narendra Modi (@narendramodi) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உலகம் முழுவதும் உள்ள பங்காரு அடிகளாரின் பக்தர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

  • Pained to learn about the passing away of Padma Shri Bangaru Adigalar Ji, the founder of Adhiparasakthi Spiritual Movement.

    His simplicity and relentless devotion to the service of humanity, for which he was affectionately called Amma, will be forever remembered. My heartfelt… pic.twitter.com/HD2Kxmb7JN

    — Jagat Prakash Nadda (@JPNadda) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பங்காரு அடிகளார் மரணத்திற்கு பல அரசியல் பிரமுகர்கள் தங்களது X தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது” என பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது…

    — Amit Shah (@AmitShah) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மத்திய அமைச்சர் அமித் ஷா, மாரடைப்பால் காலமான பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, “ஆன்மிக குரு மற்றும் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இவர் என்றென்றும் போற்றப்படுவார்” என பதிவிட்டுள்ளார்.

  • 'அம்மா' பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!- ஆளுநர் ரவி pic.twitter.com/3bls0yRunv

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மேலும், இன்று நடைபெறவுள்ள பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கு அரசு மரியாதை உடன் நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

    திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalinpic.twitter.com/AQPJbfazYD

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்” என குறிபிட்டுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அடிகளாரின் மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பு எனவும், அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என இரங்கலை தெரிவித்துள்ளார்.

  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார்… pic.twitter.com/8GH3DrrtjR

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், இன்று திருப்பூரில் நடக்கவிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் பங்காரு அடிகளாரின் மரணத்தால் தேதி மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் சுப்பிரமணி ஆன்மீக சேவகர் பங்காரு அடிகளார் ஆனது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.