ETV Bharat / state

சென்னையில் ரவுடி மீது தாக்குதல்

author img

By

Published : Jul 25, 2021, 7:59 PM IST

புளியந்தோப்பில் ரவுடி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ரவுடி மீது தாக்குதல்
ரவுடி மீது தாக்குதல்

சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு ரவுடி மணிகண்டன் (45). இவர் புளியந்தோப்பு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று (ஜூலை. 24) நின்று கொண்டிருந்தார்.

தலையில் பலத்த காயம்

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாதவர்கள் மணிகண்டனை தாக்கி கீழே தள்ளினர். இதில் அவருக்கு பின் தலையில் காயம் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது மணிகண்டன் தலையில் ரத்தம் கட்டிய நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடி மீது தாக்குதல்

வீரர்கள்போல் தாக்குதல்

இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில், ரவுடி மணிகண்டனை அடையாளம் தெரியாதவர்கள் குத்து சண்டை வீரர்கள் போல் தாக்கி கீழே தள்ளியது பதிவாகியிருந்தது.

போலீசார் விசாரணை

இந்நிலையில் ரவுடி மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விவசாயி தற்கொலை மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.