ETV Bharat / state

சென்னையில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் - போலீஸ் விசாரணை!

author img

By

Published : Jan 22, 2023, 6:39 PM IST

சென்னை எம்கேபி நகரில் பொதுவெளியில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

person
person

சென்னை: சென்னை எம்கேபி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியில் ஒருவர் பட்டாக்கத்தியுடன் வலம் வந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மக்கள் குறிப்பிட்ட அந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர் சட்டையின் பின்பக்கம் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பட்டாக்கத்தியை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் எம்கேபி நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (32) என்றும், இவர் திமுக நிர்வாகி சௌந்தரராஜன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, தற்போது சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

மேலும், சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பட்டாக்கத்தியை தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாக தினேஷ் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கை மீது ஆசிட் வீசிய அக்கா.. வெளியான பகீர் காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.