ETV Bharat / state

“எதிர்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு பாஜக பயப்படுகிறது” - ஐடி ரெய்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 12:40 PM IST

MK Stalin: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது ஆகியவற்றிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40 இடங்களில் இன்று (அக்.5) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னை தியாகராய நகர், அடையாறு, குரோம்பேட்டை, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • The Union BJP Government's vindictive politics knows no bounds!

    Arresting AAP MP Sanjay Singh and raiding DMK MP Jagathrakshakan's home are clear examples of their misuse of independent investigating agencies for political ends against INDIA bloc leaders.

    This deliberate… https://t.co/xZYkWDA7CI

    — M.K.Stalin (@mkstalin) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் தாம்பரத்தில் உள்ள பாரத் யுனிவர்சிட்டி கல்லூரி, பல்லாவரத்தில் உள்ள வேலா மருத்துவமனை, பூந்தமல்லி சவிதா மருத்துவமனை, பள்ளிக்கரனை பாலாஜி மெடிக்கல் கல்லூரி, தியாகராய நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சோதனை நடைபெறும் இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முன்னதாக, இவருடைய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரியினரால் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை முதல் இவருக்கு தொடர்புடைய சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த வருகின்றனர். மேலும் எம்பி ஜெகத்ரட்சகன், பல நிறுவனங்களில் தற்போது முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையான வரி செலுத்தவில்லை என்பதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தனது ‘X' வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே கிடையாது. ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் INDIA கூட்டணி தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.

எதிர்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை, பாஜக வசதியாக மறந்து விடுகிறது. ஆனால், அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதில் நரகத்தில் இருப்பதாகத் தெரிகிறது. எதிர்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பாஜக பயப்படுகிறது. அவர்கள் தங்கள் சூனிய வேட்டையை நிறுத்திவிட்டு, உண்மையான பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், எம்பி ஜெகத்ரட்சகன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளிலும், முன்னாள் மத்திய தொழில் துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகவும் பதிவி வகித்துள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இதையும் படிங்க: டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது; ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.