ETV Bharat / state

திருப்பூரில் தேன் பதப்படுத்தும் மையம்.. தூத்துக்குடியில் பனை ஓலை தொழிற்கூடம்.. கதர் மற்றும் கிராமத் தொழில் துறை புதிய அறிவிப்புகள்!

author img

By

Published : Apr 14, 2023, 9:28 AM IST

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் சார்பில் புதியதாக சில அறிவிப்புகளை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் சட்டப் பேரவையில் வெளியிட்டார்.

Assembly
கதர் மற்றும் கிராமத் தொழில் துறை

சென்னை: தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு;

  • சென்னை எஸ்பிளனேடு பகுதியில் 44,640 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ள குறளாக கட்டினத்தினை இடித்து விட்டு நவீன வசதிகளுடனும், போதுமான வாகன நிறுத்தும் இட வசதிகளுடனும் புதிய கட்டிடம் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும்.
  • சுமார் 8,720 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி உதவி இயக்குனர் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் 1966-ல் கட்டப்பட்ட நிலையில் தற்போது பழுதடைந்துள்ளது. ஆகையால் இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.140 இல் இருந்து ரூ.145 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • நீலகிரி மாவட்ட தேன் விவசாயிகளிடமிருந்து மலை தேனை கொள்முதல் செய்து பகுப்பாய்வு செய்து பாட்டில்களில் நிரப்பிட ஏதுவாக திருப்பூர் கதிர்வலாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் புதிய தேன் பதப்படுத்தும் நிலையம் ஒன்று நிறுவப்படும்.
  • மேலும், நீலகிரி மாவட்டம் கோகால் திருச்சிக்கடி கீழ் கோத்தகிரி புது கோத்தகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் மண்பாண்டகளை செய்யும் கோத்தாஸ் பழங்குடி மக்களின் உற்பத்தி திறனை அதிகரித்திட இலவசமாக 100 நவீன மின்விசை சக்கரங்கள் ரூ.25 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  • நீலகிரி மாவட்டம் கோக்கால் மற்றும் திருச்சிக்கடி ஆகிய பகுதிகளில் உள்ள மண்பாண்டகளை செய்யும் கோத்தாஸ் பழங்குடி மக்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் 600 சதுர அடி மற்றும் 300 சதுர அடி அளவுகளில் 2 மண்பாண்ட தொழிற்கூடங்கள் கட்டித் தரப்படும்.
  • நீலகிரி மாவட்டம் கோக்கால் மற்றும் திருச்சிக்கடி ஆகிய பகுதிகளில் உள்ள மண்பாண்டகளை செய்யும் கோத்தாஸ் இன மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் 4 மண் அரைக்கும் இயந்திரங்களும் வழங்கப்படும்.
  • செங்கோட்டை மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 600 சதுர அடி அளவில் புதிய தொழில் கூடம் கட்டித் தரப்படும்.
  • வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மூன்று கதரங்காடிகள் ரூ.3 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
  • பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 40 பட்டு நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் புதிய தரிகல் வழங்கப்படும்.
  • பட்டு நெசவு பணி மேற்கொள்ளும் 300 பட்டு நெசவாளர்களுக்கு ரூ.8 லட்சம் செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.
  • கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 100 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சம் செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.
  • சிவகங்கை மாவட்டம் கண்டனூர் சோப்பு அழகில் தானியங்கி சோப்பு தயாரிக்கும் இயந்திரம் ஒன்று ரூ.15 லட்சம் செலவில் நிறுவப்படும்.

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம்:

  • ராமநாதபுரம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பகுதியில் பனைப்பொருள் வர்த்தக மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் பனைவெல்ல கிடங்கு மற்றும் பனை ஓலைத் தொழிற்கூடம் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • கடலூர் நகரத்தில் நாலு விற்பனை அங்காடிகள் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள தொழிற் கூடத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து தரப்படும்.
  • மதுரை விருதுநகர் திண்டுக்கல் மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சம்மேளனதிர்க்கு குளிர்சாதன வசதிகளை கொண்டு 10 தள்ளுவண்டிகள் மற்றும் 5 குளிர் பதனப் பெட்டிகள் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  • தமிழ்நாடு மாநில இணையத்தின் மானாமதுரை கிளை வளாகத்தில் விற்பனை அங்காடி ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.

இதையும் படிங்க: CMDA: வடசென்னை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.