ETV Bharat / state

‘தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை’ - மல்லை சத்யா

author img

By

Published : Mar 4, 2021, 10:12 PM IST

Updated : Mar 5, 2021, 6:35 PM IST

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக - மதிமுக இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “நாளை தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும். திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து திமுகவுடன் மதிமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியதாவது,

“மதிமுக சார்பாக கடந்த சந்திப்பின்போது ஒரு எண்ணிக்கையில் தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் கொடுத்திருந்தோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா

கடந்த முறை எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில்தான் தற்போதும் இருக்கின்றனர். எனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன்?

Last Updated : Mar 5, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.