ETV Bharat / state

காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

author img

By

Published : Dec 6, 2019, 6:07 PM IST

சென்னை : வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் காதலி  புகாரளித்துள்ளார்.

Lady complaint
Lady complaint

சென்னை போரூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மடிப்பாக்கத்திலுள்ள கடையில் பூங்காவனம் (26) வேலைப் பார்த்து வந்துள்ளார்.

அதே கடையில் பணிபுரியும் கௌதம்(27) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. பின்னர், பல முறை இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர், கௌதமிடம் திருமணம் பற்றி கேட்டால், வீட்டில் எல்லோரிடமும் கூடிய விரைவில் பேசி திருமணம் செய்துகொள்வதாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு கௌதமிற்கு பதவி உயர்வு பெற்று, வேறு கடைக்குச் சென்றுவிட்டார். மேலும், கவுதம் பூங்காவனத்தை புறக்கணிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் கெளதம் தன்னை ஏமாற்றிவிட்டதாக, பூங்காவனம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் எந்தவித ஆவணமும் இல்லை என காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கெளதம், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து உள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய கவுதம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, பூங்காவனம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:

சூழலை பாதுகாக்கும் 'ஜீரோ வேஸ்ட்' கடை!

Intro:Body:காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

சென்னை போரூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் வசித்து வருபவர் பூங்காவனம் (26).இவர் மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் கடையில் 2016ஆம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்துள்ளார்.அதே கடையில் பனிப்புரியும் கௌதம்(27) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் பல முறை இல்லற வாழ்க்கையிலும் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் கௌதமிடம் திருமணம் பற்றி கேட்டால் வீட்டில் எல்லோரிடமும் கூடிய விரைவில் பேசி திருமணம் செய்துகொள்வதாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு கௌதமிற்கு பதவி உயர்வு பெற்று வேறு கடைக்கு சென்றுவிட்டார்.மேலும் என்னை புறக்கணிக்க கவுதம் ஆரம்பித்தார்.இதனால் பயந்து தனது குடும்பத்தினரை அழைத்து வந்து கவுதமிடம் சண்டையிட்டதாகவும் கூறினார்.

பின்னர் கவுதம் என்னை ஏமாற்றிவிட்டதாக பூங்காவனம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த வித ஆவணமும் இல்லை என காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.இதை சாதகமாக பயன்படுத்தி கவுதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து உள்ளதாக தெரிவித்தார்.இதனால் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய கவுதம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.