ETV Bharat / state

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்த குண்டாஸ்!

author img

By

Published : Jun 27, 2021, 9:23 AM IST

பாலியல் வழக்கில் கைதான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்த குண்டாஸ்
ஃப்தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்த குண்டாஸ்

சென்னை: நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், பிராட்வே-யிலுள்ள பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் தடகளப் பயிற்சி மையம் நடத்தி வந்தார்.

இவரிடம் பயிற்சிக்கு வந்த சில பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்தப் புகாரின் பேரில் நாகராஜனைக் கைது செய்த காவல் துறையினர், புழல் சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை:

இதனைத்தொடர்ந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நாகராஜன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் இருவர் பாலியல் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.