ETV Bharat / state

Nallamma Naidu passed away: ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அலுவலர் நல்லம நாயுடு காலமானார்!

author img

By

Published : Nov 16, 2021, 11:44 AM IST

Updated : Nov 16, 2021, 12:08 PM IST

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அலுவலர் நல்லம நாயுடு மாரடைப்பால் காலமானார் (Nallamma Naidu passed away).

dds
dfsd

சென்னை: பெரவள்ளூர் சந்திரசேகரன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நல்லம நாயுடு (83). இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், இளங்கோ, சரவணன், செல்வி, கனிமொழி என நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர்.

இவர், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை உறவினர்கள் சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் நல்லம நாயுடு காலமானதாக (Nallamma Naidu passed away) அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நல்லம நாயுடு

நல்லம நாயுடு, ஊழல் தடுப்பு - கண்காணிப்புத் துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அலுவலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பள்ளிகளில் பாலியல் புகார் அளிக்க பெண் ஆசிரியர் தலைமையில் குழு - அமைச்சர் தகவல்

Last Updated :Nov 16, 2021, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.