ETV Bharat / state

நீட் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது - இல. கணேசன்

author img

By

Published : Oct 30, 2020, 3:43 PM IST

சென்னை: நீட் தேர்வை மத்திய அரசு நடத்துவதால், அனைத்து மாநிலத்திற்கும் பொதுவான ஒரு கருத்தை தான் ஆலோசித்து நிறைவேற்ற முடியும் என இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

ila ganesan
ila ganesan

முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தெய்வீகத்தையும், தேசியத்தையும் இரு கண்களாக போற்ற வேண்டும் என்று சொன்னவர் முத்துராமலிங்க தேவர். வீரம், விவேகம் ஆகிய இரு கொள்கைகளையும் பிரதிபலிக்கும் கூடிய வகையில் நடைபெறும் அரசு மத்திய அரசு. ஓ.பி.சி இட ஒதுக்கீடு கடைசி நேரத்தில் கோரிக்கை வைத்ததால் அதை அமல்படுத்த முடியவில்லை.

நீட் தேர்வை மத்திய அரசு நடத்துவதால், அனைத்து மாநிலத்திற்கும் பொதுவான ஒரு கருத்தை தான் ஆலோசித்து நிறைவேற்ற முடியும். கடைசி நேரம் என்பதால் 50 விழுக்காடு ஒதுக்கீடு அமலப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஈரோடு நந்தா கல்வி நிறுவனத்தில் 3ஆவது நாளாக ஐடி ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.