ETV Bharat / state

சிறுதானியங்களுக்கு சிறப்பு கவனம்..! பனைக்கு ஆராய்ச்சி மையம்..! வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்!

author img

By

Published : Mar 21, 2023, 2:59 PM IST

வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் குறிப்பிடத்தக்க வகையிலான திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

Highlights of Agriculture Budget
2023 - 2024 வேளாண் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்

  • உணவு தானிய உற்பத்தி இலக்கு: 2023 - 2024ஆம் நிதியாண்டில் உணவு தானியங்கள் 127 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தென்னை மரக்கன்றுகள்: 2504 கிராமப் பஞ்சாயத்துகளில், 300 வீடுகளுக்கு தலா இரண்டு மரக்கன்றுகள் வீதம் 15 லட்சம் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்படும்.
  • ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு: சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கேழ்வரகு, கம்பு ஆகிய சிறுதானியங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
  • சிறுதானிய மண்டலங்கள்: நாமக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் புதிதாக சிறுதானிய மண்டலங்களில் இணைக்கப்படும்.
  • ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு: தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு: ரசாயன உரப் பயன்பாட்டை குறைத்து இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கிராம முன்னேற்றக் குழு: பருவத்திற்கேற்ப பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம முன்னேற்றக்குழு அமைக்கப்படும்.
  • வேளாண் கருவிகள்: 60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகப்படும்.
  • மரபு சார் நெல் ரகங்கள்: நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தில் விவசாயிகளுக்கு தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரக விதைகள் மானிய விலையில் வழங்குவதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 10 விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய்: அகில இந்திய அளவிலான பாரம்பரிய ரக நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்து வரும் 10 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்: ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நம்மாழ்வார் விருது: அங்கக(Organic) விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மின்னணு வேளாண்மை திட்டம்: விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு வசதியாக 37 மாவட்டங்கள் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், பணமில்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்.
  • சிறுதானிய திருவிழாக்கள்: சிறுதானிய உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.82 கோடி மதிப்பீட்டில் சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
  • முருங்கை இயக்கம்: தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் ஆயிரம் ஹெக்டரில் சாகுபடியினை உயர்த்திட 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.450 கோடி: தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குளிர்கால காய்கறிகளுக்கு மானியம்: ஆண்டு முழுவதும் தக்காளி கிடைக்க ரூ.19 கோடியும், வெங்காயம் கிடைக்க ரூ.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குளிர்கால காய்கறிகளான சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு வெளிநாடு சுற்றுலா: வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ளும் வகையில் 150 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து நெதர்லாந்து, தாய்லாந்து, இஸ்ரேல், எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பருத்தி இயக்கம்: நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மிளகாய் மண்டலம்: மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உருவாக்கவும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஓசூர் பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு: கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி தென்னை, ஓசூர் பன்னீர் ரோஜா ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சி: ரூ.1 கோடி செலவில் 500 இளைஞர்களுக்கு வேளாண் கருவிகளை இயக்கப் பயிற்சி வழங்கப்படும்.
  • பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பண்ணைச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
  • விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் குழு: விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள், வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் பரிமாறும் வகையில் வட்டார அளவில் வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும்.
  • பனை இயக்கம்: பனை மேம்பாட்டு இயக்கத்தில், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகிக்கப்படும். 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்களுக்கு 510 உபகரணங்கள் வழங்கப்படும். பனை மரம் ஏறுவதற்கு 1,000 உபகரணங்கள் வழங்கப்படும். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பனை பொருட்கள் தயாரிக்க பயிற்சி: தமிழ்நாடு பனை பொருட்கள் வளர்ச்சி வாரியத்தின் பனை வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்டப் பிற பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி வழங்கப்படும். மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி திட்டங்களுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பனை ஆராய்ச்சிக் கூடம்: குறுகிய கால பனை ரகங்களை உருவாக்குதல், நீரா, பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் தரத்தினை ஆராய, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் பனைக்கென ரூ.15 கோடியில் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.