ETV Bharat / state

‘ஜூலை 4 முதல் 7ஆம் தேதி வரை கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ - உயர் கல்வித்துறை அறிவிப்பு!

author img

By

Published : Jun 30, 2023, 10:50 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் ஜூலை 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

arts college admission
நேரடி மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மொத்தம் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 299 இடங்கள் உள்ள நிலையில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை சேர்ந்துள்ளனர். மேலும், ஜூலை 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுவரை 36 ஆயிரத்து 626 மாணவர்களும், 48 ஆயிரத்து 273 மாணவிகளும் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் படித்த 23ஆயிரத்து 295 மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. ஜூலை 3ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர்.

மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல்முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்த பின்னர் வேறுக் கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குநரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றப்பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25 ஆயிரத்து 253 மாணவிகள் ஆவார்கள். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10ஆயிரத்து 918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மொத்தமாக 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31ஆயிரத்து 621 பேரும், மாணவிகள் 44ஆயிரத்து 190 பேரும் சேர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரியின் தரவரிசை அடிப்படையில் இன வாரி ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை 84ஆயிரத்து 899 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மேலும், ஜூலை 4 ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 5ஆம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 6ஆம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு, ஜூலை 7ஆம் தேதி அனைத்து பிரிவினருக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வீட்டுமனை வழங்கிய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.