ETV Bharat / state

பணத்தைக் கட்டினால் ஜாமின்: கந்துவட்டி வசூலித்தவருக்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம்!

author img

By

Published : Dec 21, 2019, 1:36 PM IST

சென்னை: ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரிடம் அதிக வட்டி வசூலித்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள, ரயில்வே டெக்னீசியன் கமலநாதன் என்பவருக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

chennai
chennai

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (60). இவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு இவருடன் தெற்கு ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக பணியாற்றிய கமலநாதன் (56) என்பவரிடம் குடும்ப செலவுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

கமலநாதன் அவரது மனைவி அமுல் இருவரும் கிருபாகரனின் வீட்டிற்கு வந்து, 30 ஆயிரம் வட்டியை எடுத்துக்கொண்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளனர். கிருபாகரனிடம் இருந்து கையொப்பமிட்ட 15 காசோலைகள், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மாதந்தோறும் வட்டித் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்துக்கொள்வதாக கமலநாதன் கூறியுள்ளார்.

பின்னர் மாதந்தோறும் 8 வருடமாக வட்டித் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் கமலநாதன் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் கிருபாகரன் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றதால் ஓய்வூதிய தொகையாக 11 லட்சம் ரூபாய் வந்துள்ளது. இதனால் கமலநாதனிடம் இருந்து கடனாக பெற்ற 3 லட்ச ரூபாயை கிருபாகரன் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்துவிட்ட காரணத்தால் தனது ஏடிஎம் கார்டு, காசோலையை திருப்பித் தருமாறு கமலநாதனிடம் கிருபாகரன் கேட்டுள்ளார். ஆனால், கமலநாதன் காசோலையைப் பயன்படுத்தி கிருபாகரன் வங்கிக் கணக்கில் அவருடைய மகளின் திருமண செலவுக்காக வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன் இது தொடர்பாக கமலநாதனிடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

interest
கைது செய்யப்பட்டுள்ள கமலநாதன்
இதையடுத்து அயனாவரம் காவல் நிலையத்தில் கமலநாதன் மீது கிருபாகரன் புகார் அளித்தார். அதிக கந்து வட்டி பெற்ற காரணத்திற்காக கமலநாதனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இதனிடையே தனக்கும், தலைமறைவாக உள்ள தனது மனைவிக்கும் ஜாமின் வழங்கக்கோரி கமலநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியபோது, 11 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை கிருபாகரனின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்முமே ஜாமின் வழங்குவதாக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கடனுக்கு வட்டி கட்டாத உணவக அதிபர் - ஆட்டோவில் கடத்திச் சென்ற வட்டி பிரபாகர்!

Intro:Body:ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரிடம் அதிக வட்டி வசூலித்த ரயில்வே டெக்னீசியன் கைது..

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்(60).இவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராக பணிப்புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இவருடன் தெற்கு ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக பணியாற்றும் கமலநாதன் (56) என்பவரிடம் குடும்ப செலவுக்காக 3லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார்.இதனால் கமலநாதன் மற்ற அவரது மனைவி அமுல் இருவரும் கிருபாகரனின் வீட்டிற்கு வந்து 30ஆயிரம் வட்டியை எடுத்து கொண்டு 2லட்சத்து 70ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். மேலும் கிருபாகரனிடம் இருந்து கையொப்பமிட்ட 15காசோலைகள் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவை அவரிடம் இருந்து கமலநாதன் பெற்று கொண்டு மாதந்தோறும் வட்டி தொகையை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து கொள்வதாக கூறி சென்றுவிட்டார்.


பின்னர் மாதந்தோறும் 8 வருடமாக வட்டி தொகையை ஏடிஎம் கார்டு மூலம் கமலநாதன் பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம் கிருபாகரன் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றதால் ஓய்வூதிய தொகையாக 11லட்சம் ரூபாய் வந்துள்ளது.இதனால் கமலநாதனிடம் இருந்து கடனாக பெற்ற 3லட்ச ரூபாயை கிருபாகரனிடம் கொடுத்துள்ளார். பின்னர் பணம் கொடுத்ததால் தனது ஏடிஎம் கார்டு மற்றும் காசோலையை கேட்டுள்ளார்.ஆனால் கமலநாதன் தருவதாக கூறி காசோலையை பயன்படுத்தி கிருபாகரன் வங்கி கணக்கில் மகளின் கல்யாண செலவுக்காக வைத்திருந்த 8லட்ச ரூபாயை எடுத்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன் இது தொடர்பாக கமல நாதனிடம் கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.பின்னர் கிருபாகரன் இது தொடர்பாக
அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அதிக கந்துவட்டி பெற்ற கமலநாதனை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கமலநாதனை புலன் விசாரணை செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கமலநாதன் ஜாமீன் வழங்ககோரியும்,தலைமறைவாக உள்ள தனது மனைவி அமுலுக்கு முன் ஜாமின் வழங்கியும் நீதிமன்றத்தில் நாடியபோது பிணை வழங்க 11அரை லட்ச ரூபாயை கிருபாகரனின் வங்கி கணக்கில் செலுத்தினால் பிணை வழங்குவதாக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.