ETV Bharat / state

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

author img

By

Published : Nov 26, 2022, 3:41 PM IST

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 16.5 லட்சம் மதிப்புடைய 345 கிராம் தங்க கம்பிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து, அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், சந்தேகம் தீராமல், அவருடைய சூட்கேஸை ஆய்வு செய்தனர்.

சூட்கேஸ்சின் ரோலர் வீல் பகுதியில், 15 தங்க கம்பிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினார். அந்த தங்க கம்பிகளின் மொத்த எடை 345 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 16.5 லட்சம் என கூறப்படுகிறது.

தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், தங்கத்தை சூட்கேஸ்க்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த பயணியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயிலில் செயின் பறிப்பு - அடித்து உதைத்த பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.