ETV Bharat / state

சென்னையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

author img

By

Published : Jan 9, 2023, 7:46 AM IST

சென்னை மதுரவாயல் அருகே வேலை செய்யும் கடையில் ஆசிட் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.

சென்னையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு
தற்கொலை

சென்னை: மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அஸ்வினி (23), ஆலப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் ஜனவரி 6ஆம் தேதி, தான் பணிபுரியும் கடையின் கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். அங்கு மயங்கிய நிலையில் கிடந்தவரை, சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன்பின் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஸ்வினி, சிகிச்சை பலனின்றி ஜனவரி 7ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அஸ்வினியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், அஸ்வினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது வலிப்பு ஏற்பட்டு வந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதன் காரணமாக ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த ஐடி ஊழியர்... காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.