ETV Bharat / state

பதுக்கப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது

author img

By

Published : Sep 21, 2022, 6:54 PM IST

பதுக்கப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
பதுக்கப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது

மதுரையில் வாகன சோதனையின்போது 400 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சாக்குமூட்டையுடன் வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் 40 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த லெட்சுமிபுரம் பகுதியைச்சேர்ந்த ஜோராராம் மற்றும் ஹரீஸ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து சுமார் 400 கிலோ அளவுள்ள குட்கா 3 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் 45ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கொள்ளையடிக்கப்பட்ட 126 சவரன் தங்க நகைகள் மீட்பு ; தனிப்படை காவல்துறையினரின் சிறப்பான சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.