ETV Bharat / state

ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு விவகாரம்.. சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ரெய்டு... 350 கிலோ உணவுகள் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 7:41 AM IST

Food safety officers raid in hotels: நாமக்கல்லில் காலாவதியான உணவால் சிறுமி உயிரிழிந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் 43 உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, காலாவதியான 355 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Food safety officers raid in hotels
சென்னையில் 40க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை

நாமக்கல் ஷவர்மா சம்பவத்தின் எதிரொலி... சென்னையில் 40க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை!

சென்னை: நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா உணவு விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த சோதனையில் கிலோ கணக்கில் அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில், உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என கண்காணிக்கவும், அதனை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

இதன எதிரொலியாக, சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் அந்த ஆய்வில், இதுவரை 33 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் இறைச்சி மற்றும் உண்ணத் தகாத கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள், பிரியாணி, சிக்கன் 65 என 355 கிலோ எடையுள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து கிருமி நாசினி கொண்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது, "நாமக்கல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சவர்மா உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் மொத்தம் 43 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக இதில் 6 கடைகள் மேற்கு மாம்பலம் கோவிந்தன் தெருவிலும், 4 கடைகள் அரும்பாக்கம் விநாயகபுரம் தெருவிலும், தி நகர் மற்றும் நுங்கம்பாக்கம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோரோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள 33 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் இறைச்சி மற்றும் உண்ணத்தகாத கெட்டுப்போன இறைச்சி உணவுப் பொருட்கள், பிரியாணி பொருட்கள், சிக்கன் 65 என 355 கிலோ எடையுள்ள உள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் 2 சவர்மா கடைகள் உட்பட 3 உணவகங்கள் செயல்படுவதில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆய்வு செய்த அனைத்து உணவகங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு மாறாக செயல்படும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, 7 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம்; இறைச்சி சப்ளை செய்த நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.