ETV Bharat / state

திறக்கப்பட்ட மீன் மார்க்கெட்: வியாபாரிகள் மகிழ்ச்சி!

author img

By

Published : Oct 5, 2020, 2:02 AM IST

சென்னை: தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக தண்டுரை மீன் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Fish market
Fish market

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் உள்ளது.

இங்குள்ள 58 கடைகளில் மீன், கருவாடு மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆவடி, பட்டாபிராம், சோராஞ்சேரி, சித்துக்காடு, அன்னம்பேடு, கருணாகரசேரி, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த மார்க்கெட்டிற்கு சென்றுதான் மீன்கள், காய்கறிகளை வாங்கி சென்று வந்தனர்.

இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த மார்க்கெட் குறுகிய இடத்தில் இருப்பதால், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க முடியதாத காரணத்தால், கரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த மே மாதம் மார்கெட்டை மாநகராட்சி நிர்வாகம் மூடியது.

இதனால் இங்கு வியாபராம் செய்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் தண்டுரை மெயின் ரோட்டில் ஆங்காங்கே மீன்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், வெயில், மழையால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், வெயிலால் மீன்கள் கெட்டு விடுகின்றன.

மேலும், வியாபாரிகள் பலர் கடைகளை வைக்க முடியாமல், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

இதனையடுத்து, மூடப்பட்ட மீன் மார்க்கெட்டை திறந்து வியாபாரிகள் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் ஆவடி மாநகராட்சி அலுவலர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

இருப்பினும் மீன் மார்க்கெட் திறக்கப்படாதாதல் கடந்த 2 ஆம் தேதி மீன் வியாபாரிகள் பட்டாபிராம், எம்.ஜி.ஆர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது, மாநகராட்சி அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்கெட்டை விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில், மீன் மார்கெட்டை ஆவடி மாநகராட்சி நிர்வாகம் திறந்தது. இதனை அடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு வியாபாரிகள் மார்கெட்டில் பல்வேறு வகையான மீன்களை வைத்து நேற்று (அக்.4) வியாபாரம் செய்தனர்.

மேலும், பொதுமக்களும் தகுந்த இடைவெளியோடு மீன்களை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பூ மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் - வியாபாரிகள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.