ETV Bharat / state

தேர்தல் 2021: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 132 ரவுடிகள் கைது!

author img

By

Published : Feb 24, 2021, 10:32 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நாளில் வடக்கு மண்டலத்தில் 132 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

election-2021-132-rowdies-arrested-as-a-precautionary-measure
election-2021-132-rowdies-arrested-as-a-precautionary-measure

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கொடுங்குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பில் இன்று (பிப்.24) ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 46 ரவுடிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 ரவுடிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ரவுடிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்10 ரவுடிகள் என மொத்தம் 132 ரவுடிகளை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு ரவுடிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் லைவ்: மங்களூருவில் ஒடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.