சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், சீமான் குறித்து பேசிய அவர், 'பிரசார நேரத்தில் மறைந்த தலைவர்களைப் பற்றி அனைவரும் பேசுவது வழக்கம் தான் என்றும், இதே போன்று தான் கமலும் பேசி வருகிறார்' என்றார். மேலும் 'சீமானின் கருத்து ஏற்க முடியாத ஒன்று என்றாலும், அவர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்றால், அனைத்துக் கட்சிகளையும் தான் தடை செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'டாக்டர் பட்டம் மலிவாக எல்லோரும் வாங்கி கொண்டு வருவதாகவும், தமிழக முதலமைச்சர் என்கிற அடிப்படையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை' என்றும் கூறினார்.
இதையும் படிங்க:
கால்வாய் கட்டும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்