ETV Bharat / state

தமிழ்நாட்டில் குறையும் கரோனா பரவல்!

author img

By

Published : Jul 21, 2022, 11:06 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், தமிழகத்தில் இருந்த 2092 பேர் உட்பட 2093 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல்
குறைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல்

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் 33 ஆயிரத்து 899 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 92 நபர்களுக்கும் என 2 ஆயிரத்து 93 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 66 லட்சத்து 25 ஆயிரத்து 662 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் 35 லட்சத்து 26 ஆயிரத்து 351 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 504 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,290 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 71 ஆயிரத்து 816 என உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு கோயம்புத்தூரில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 31 என அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 516 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 269 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 178 நபர்களுக்கும் திருவள்ளூரில் 104 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பரவி வருகிறது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குரங்கம்மைக்கான பாதிப்புகள் தமிழ்நாட்டில் தென்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.