ETV Bharat / state

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

author img

By

Published : Jul 30, 2021, 9:18 PM IST

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வந்த கரோனா தொற்றின் பாதிப்பு இன்று(ஜூலை 30) அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

corona-increases-recurrence-in-tamil-nadu-to-1947-people
corona-increases-recurrence-in-tamil-nadu-to-1947-people

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 112 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 1,947 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 64 லட்சத்து 12 ஆயிரத்து 705 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 25 லட்சத்து 57 ஆயிரத்து 611 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 21 ஆயிரத்து 207 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், மேலும் குணமடைந்த 2,193 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை முடிந்து குணமடைந்து வெளியே சென்றவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 2 ஆயிரத்து 627 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என மொத்தம் 28 பேர் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.