ETV Bharat / state

‘சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ - முதலமைச்சர் அறிவுறுத்தல்

author img

By

Published : Jan 19, 2020, 6:19 PM IST

சென்னை: சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்திருப்பதாகவும், சாலை விதிகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் 'சாலைப் பாதுகாப்பு வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு, 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 20ஆம் தேதிமுதல் 27ஆம் தேதிவரை (26ஆம் தேதி நீங்கலாக) கடைப்பிடிக்கப்படும்.

இந்தச் சாலைப் பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களைத் தயாரித்து திரையரங்குகளில் திரையிடுதல், ஈர்ப்பு இசை விளம்பரங்கள் தயாரித்து அகில இந்திய வானொலி மூலமாகப் பண்பலை சேனல்களில் ஒலிபரப்புதல், அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்திற்கும், முதலமைச்சரின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்புத் திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்திவருகிறது.

உச்ச நீதிமன்ற சாலைப் பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி 2016ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 விழுக்காடு குறைத்திட வேண்டும் என்ற இலக்கை அடைய அரசு மேற்கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.60 விழுக்காடு என்ற அளவிலும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 விழுக்காடு என்ற அளவிலும் குறைந்துள்ளன.

மேலும், ஒவ்வொரு 10 ஆயிரம் வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019ஆம் ஆண்டில் மூன்று நபர்களாகக் குறைந்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாகச் சென்று சேவைபுரிவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டுவருகின்றன.

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன - முதலமைச்சர் பழனிசாமி

Intro:


சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது
முதலமைச்சர் சாலை பாதுகாப்பு வாழ்த்து செய்தி Body:


சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது
முதலமைச்சர் சாலை பாதுகாப்பு வாழ்த்து செய்தி
சென்னை,

தமிழக முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள 31-வது சாலைப் பாதுகாப்பு வார வாழ்த்துச் செய்தியில்,          பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “சாலைப் பாதுகாப்பு வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 20 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை (26 ந் தேதி நீங்கலாக) கடைபிடிக்கப்படும். இந்த சாலைப் பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
         சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து திரையரங்குகளில் திரையிடுதல் மற்றும் ஈர்ப்பு இசை விளம்பரங்கள் தயாரித்து அகில இந்திய வானொலி மூலமாக பண்பலை சேனல்களில் ஒலிபரப்புதல், அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்திற்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி 2016-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்திட வேண்டும் என்ற இலக்கை அடைய அரசு மேற்கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.60 சதவீதம் என்ற அளவிலும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளன. மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019 ம் ஆண்டில்
3 நபர்களாக குறைந்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு வருகின்றன.
         சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திடவும், விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.